ஞாயிறு, அக்டோபர் 30, 2011

.


إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

நம்பிக்கை கொண்ட ஆண்களையும்> பெண்களையும் துன்புருத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்திகன் வேதனை இருக்கிறது அவர்களுக்கு பொசுக்கும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 85:10>



தொடரும் யூத பயங்கரவாதிகளின் வெறிச்செயல்கள் பற்றி எரிகிறது ஃபலஸ்தீன்.


நவம்பர் 7, 2010

கடந்த நவம்பர் 7 அன்று ஃபலஸ்தீனின் அர்ராஹத் என்ற கிராமத்தில் நுழைந்த இஸ்ரேலிய தீவிரவாத ஆக்கிரமிப்பு படையினர் அங்கு ஒரு பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களை கைது செய்து நகருக்கு வெளியே அடைத்து வைத்துவிட்டு அந்த பள்ளிவாசல் முழுவதையும் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இந்த வெறிச்செயலைக் கண்டித்து அந்த நகரத்து மக்கள் போராட்டத்தில் இறங்கிய பொழுது அவர்களின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போல் நாடகமாடி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் 
.
மேற்படி இடித்து தரைமட்டமாக்கப்பட்டப் பள்ளிவாசல் அரசு அனுமதிப் பெறாமல் கட்டப்பட்டது என்றக் காரணத்தை வந்தேறி இஸ்ரேலிய அரசு வெட்கமில்லாமல் கூறி உள்ளது தான் வேதனையாக உள்ளது. இது அந்த மொத்த ஊரையும் ஆக்ரமிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயல் என்பதற்கு கடந்த ஜூலை மாதம் இதே ஊரில் இதே காரணத்தைக் கூறி ஏராளமான வீடுகளை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது உதாரணமாகும்

அதற்கடுத்து அல்கலீல் நகரின் பள்ளிவாசல் ஒன்றில் நுழைந்த இந்த பயங்கரவாதிகள் அங்கு ஓதுவதற்காக வைக்கப்பட்டிருந்த புனித குர்ஆனின் பிரதிகளை கிழித்தெறிந்ததுடன், முஹம்மது(ஸல்) அவர்ளை இழிவுப்படுத்தி எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அப்பள்ளிவாசல் முழுவதும் ஒட்டி அகமகிழ்ந்துள்ளனர் 
.
நவம்பர் 10, 2010

கடந்த நவம்பர் 10 அன்று காஸாப் பகுதியில் ரஃப்ஹா என்ற ஊருக்குள் ராணுவ வாகனங்களளுடன், புல்டோஸர் சகிதம் நுழைந்த யூத ஆக்ரமிப்பு படைகள் நதா என்ற குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளது எதிர்த்தவர்களை கண்மூடித் தனமாக சுட்டுத் தள்ளி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மொத்தக் குடியிருப்பையும் இடித்துத் தரைமட்டமாக்கி உள்ளது. அப்பொழுது அதன் மேலே இஸ்ரேலிய யுத்த விமானங்களும் பறந்திருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது குறுகிய நேரத்தில் அந்தப்பகுதி முழுவதும் சரணடைந்து விட்டதால் அங்கிருந்து அந்த விமானங்கள் மறைந்து விட்டதாகவும், எதரிப்பு வலுவாக இருந்திருந்தால் குண்டுகளை பொழிந்திருக்கலாம் என்றும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்

திடீர் ஆக்ரமிப்புகளும், திடீர் தாக்குதல்களும் கடந்த 2009 லிருந்து தான் அதிகரித்துள்ளதாகவும் எதிர்பாராத இந்த தீடீர் தாக்குதலில் ஏராளமான மக்கள் குண்டடிபட்டு குற்றியிரும், குறை உயிருமாய் அள்ளிக்கொண்டு வருகின்றனர் என்று மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் ஆதம் ஆபூ ஸல்மியா கூறுகிறார் 
  
இதில் இன்னும் வருந்தத் தக்க விஷயம் யாதெனில் திடீர் ஆக்ரமிப்பிற்குள்ளாக்கப்பட்ட இந்த  ஊரிலிருந்து ஏராளமான சிறுவர்களை அவர்களின் தாய், தந்தையர் முன்னிலையிலேயே இழுத்துச் செல்லப்படுவதாகவும் தடுக்க முணைகின்ற நிராயுதபாணிகளாகிய தாய் தந்தையர் ஈவிறக்கமின்றி சுட்டுத் தள்ளப்படுவதாகவும் இவ்வாறு; இழுத்துச் செல்லப்படும் அப்பாவி சிறுவர்களை எல்லையோர தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்வதாகவும் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 33 சிறுவர்கள் இந்த ஈனப் பிறவிகளால் பிடித்துக் கொண்டு வந்து அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் இதுவரை விடுவிக்;கப்படவில்லை என்றும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.  

நவம்பர் 11, 2010

அல்நஃப்லஸ் என்ற நகரில் சட்ட விரோதமாக குடியேறிய வந்தேறி யூதர்கள் கடந்த நவம்பர் 11 அன்று எல்லைப் பாதுகாப்பு யூத பயங்கரவாதப் படையினரின் துணையுடன் குழுவாக சென்று ஸாலிம் என்ற கிராமத்தில் அங்குள்ள ஏழை விவசாயிகளின் சுமார் 15 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பளவிலான ஆலிவ் மரத் தோட்டங்களை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். ஆலிவ் மரங்கள் எண்ணெய் பசை உள்ளதால் நெருப்பைப் பற்ற வைத்த உடன் அசுர வேகத்தில் எரியத் தொடங்கிய தீ அதிவேகமாக பரவி அருகிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆலிவ் மரங்களையும் கருக்கி நாசமாக்கி உள்ளன

இது இப்பொழுது தான் புதிதாக நடக்கும்வெறிச் செயல் அல்ல கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்ட இந்த வெறிச் செயல் இன்று பெரிய திட்டத்துடன் நிறைவேற்றப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்

ஜைத்தூன் காய்களை விளைச்சல் செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் இந்த ஸாலிம் கிராம மக்களின் வயிறுகளை பற்றி எரியச் செய்த இந்தப் பாவிகளை வலிமை மிக்க அல்லாஹ்விடம் கையேந்தி ஒப்படைத்து உள்ளனர்

இந்த லட்சனத்தில் பாகிஸ்தானின் ஃபலூசிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் ஃபலூசிஸ்தான் மீது ஏவுகனை தாக்குதல் தொடுக்க பாகிஸ்தானிடம் அமெரிக்கா அனுமதி கேட்டு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருவதாக செய்திகள் கூறுகிறது இறுதியாக பாகிஸ்தான்  மறுத்து விட்டதாகவும் மற்றொரு செய்தி கூறுகிறது.  

ஊர் வம்பு வழக்கும் தன் செல்லக்குழந்தையை கண்டித்து வீட்டில் வைத்துக் கொள்ளத் வக்கில்லாதவன் ஊரான் பிள்ளையை கண்டிக்க கம்பை தூக்கிக்கொண்டு திரிந்த கதையாய் ஃபலஸ்தீன் மீது அட்டூழியம் செய்யும் இஸ்ரேலிய தீவிரவாதிகளை கண்டிக்க திராணியற்று பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் இருப்பதாக ஓலமிடுவது ஒபாமாவுக்கு அழகல்ல    
ஃபலஸ்தீன் பிரச்சனையை முடிப்பது தான் என் முதல் வேலை என்று பதவிக்கு வருவதற்கு முன்  கூறிய ஒபாமா என்ன நோக்கத்தரில் அதை அப்பொழுதுக் கூறினார் என்பது இப்பொழுது தான் புரிகிறது

நவம்பர் 14, 2010

புனித பைத்துல் முகத்தஸ் அமையப் பெற்றிருக்கும் ஜெரூஸலத்தின் மத்தியப் பகுதியில் பிரம்மாண்டமான யூத கோயில் ஒன்றை நிருவுவதற்காக கடந்த நவம்பர் 14 அன்று பயங்கரவாத இஸ்ரேல் அரசு யூத தீவிரவாதிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.  

புதிதாக கட்டப்படவுள்ள மேற்படி யூத கோயிலுக்கு அனுமதி கிடைத்த உடன் பிரபல யூத கம்பெனி ஒன்று 40 மில்லியன் இஸ்ரேலிய ஷெக்கல்களை வழங்கி உள்ளதாம் 
.
இந்த கோயிலுக்கு தஃபூராத் இஸ்ரேல் என்றப் பெயரும் இடப்பட்டுள்ளது இது பைத்துல் முகத்தஸ் டூமின் அளவை விட பலமடங்கு அளவுப் பெரிதாக அமைக்க இருப்பதாகவும், இந்த யூத கோயில்  ஜெரூஸலத்தின் எந்தப் பகுதியில் நின்றுப் பார்த்தாலும் காட்சி தரும் அளவுக்கு மிக உயரமாக அமைக்க இருப்பதாகவும், இந்த கோயில் பிரபல கட்டிடக் கலை வல்லுநர்களைக்கொண்டு மிகப்பெரிய தொழில் நுட்பத்துடன் அமைக்கவிருப்பதால் இது கட்டி முடிக்கப்படும் கால அளவு சுமார் ஐந்து வருடங்கள் ஆகும் என்றும் ஜெரூஸலத்தின் அமைச்சர் தாலிப் அபூ ஷஆர் தெரிவிக்கிறார்

மேலும் அவர் கூறுகையில் கடந்த மே மாதம் மஸ்ஜிதுல் அக்ஸா அருகில் கராப் எனும் பெயரிலான யூத கோயில் ஒன்று எந்த எதிர்ப்புமின்றி நிருவப்பட்டதாகவும் அப்பொழுதே ஃபலஸ்தீன மக்களும், அரபு நாடுகளும், சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும் வீரியத்துடன் எதிர்த்திருந்தால் அந்த கோயிலின் கட்டுமானமும் நிருத்தப்பட்டிருந்திருக்கும் இப்பொழுது தஃபூராத் இஸ்ரேல் கோயிலுக்கான கட்டுமான அனுமதியும் கிடைத்திருக்காது என்று வருத்தத்துடன் கூறியவர் மேலும் கூறுகையில் மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட கராப் கோயில் மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டிருப்பதாகவும் அது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்.  

சாதாரணமாக குறுகிய காலத்தில் கட்டப்பட்ட கராப் யூத கோயிலே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக வடிவமைக்;கப்பட்டிருக்கிறதென்றால் மிகப் பெரிய திட்டமிடலுடன் அதுவும் ஐந்து வருட கால அவகாசம் எடுத்து கட்டப்படவுள்ள தஃபூராத் கோயில் எப்படி இருக்குமோ ?  

போராட்டம், போராட்டம் என்று நடத்தி ஒவ்வொருப் போராட்டத்திலும் யூத தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு ஏராளமான உறவுகளை பறிக் கொடுத்ததால் ஃபலஸ்தீன மக்களின் போராட்டம் வலுவிழந்து வருவதையும் யூத பயங்கரவாதிகளின் சதி திட்டங்கள் படிப்படியாக ஃபலஸ்தீனத்தில் நிறைவேறி வருவதையுமே மேற்காணும் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன

எந்தக் கூரிய ஆயுதத்திற்கும் அஞ்சாமல் நெஞ்சுறத்துடன் நின்று போராட்டங்களை நடத்தி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்கு உணர்த்தியதுடன், உலகில் உள்ள சிறுபான்மை இஸ்லாமிய அமைப்புகளுக்கும் போராட்ட உணர்வைத் ஊட்டியவர்கள் இந்த வீரமிக்க ஃபலஸ்தீனியர்கள் அதனால் தான் இன்றும் அவர்களில் சில மக்கள் அங்கு வாழ முடிகிறது இல்லை என்றால் இந்த சண்டாளர்கள் அப்பொழுதே மொத்த ஃபலஸ்தீனத்தையும் சுருட்டி கையிலெடுத்திருப்பார்கள்

என்ன இழப்புகள் ஏற்பட்டாலும் இழந்த உரிமைகளை வென்றெடுக்கும் வரை உரிமை மீட்பு  போராட்டங்களை நிருத்தக் கூடாது என்பதையே ஃபலஸ்தீன மக்களின் போராட்டங்களின் வீரியம்  குறைந்ததும் பதுங்கி இருந்த வந்தேறிகள் பாய்ந்து அடர்ந்தேறுவதைக் காட்டுகிறது


உணர்வுக்கு எழுதியக் கட்டுரை
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.